செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மாற்றம் தேடும் உரிமைகள்




ஹாரூன் மூஸா  22-03-2011


தாயே!
முதியோர் இல்லத்தில்
வாழ்ந்து கொண்டே சாகிறாய்..
செத்துக் கொண்டே வாழ்கிறாய்.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

தாயே!
கண்ணின் இமையும்
அன்பின் இமயமும் நீ தானே,
பிள்ளை மனம் கல்லென்பது
பார் போற்றும் மெய் தானோ?

தாய்மார் தினத்தில் மட்டுமே
வந்து போகிறார்கள்.
மகளிர் தினத்தில் மட்டுமே
வாழ்த்துச் சொல்கிறார்கள்.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

மகளே!
வேலை வாய்ப் பென்றும்,
பட்டம் பதவியென்றும்,
தாயாகும் பாக்கியத்தைத்
தள்ளிப் போடுகிறார்கள்.

மகளே!
காலா காலமாக
மறைத்துப் பார்த்த அழகை,
அழகு ராணியாக
அம்பலப்படுத்துகிறார்கள்.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

மகளே!
பெஷன்மோகமோ..
செல்வத்தோடு செழிப்பையும்;
உழைப்போடு ஊதியத்தையும்
கொள்ளை அடிக்கின்றது.

வரவில்லாத செலவையும்
உவப்பில்லாத பிழைப்பையும்
கொள்கை என்கின்றது.

மகளே!
அன்று..விளம்பரமின்றி
வியாபாரமில்லை என்றார்கள்.
இன்று..பெண்ணின்றி
விளம்பரமில்லை என்கிறார்கள்.
இது..விலை போகும் மாதருக்கு
ஊரார் வைத்த புதுப் பெயரா?
உலகத்தார் அமைத்த புதுத் தொழிலா?

நவ யுகத்தின் நாகரீகம் 
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

மகளே!
கட்டில் காட்சியும்,
காமக் கதையும்,
மலிந்த சினிமாவில்
சிலிர்க்கிறார்கள்.

முத்தக் காட்சியும்
நீச்சல் உடையும்
நிறைந்த தெருவில்
சீவிக்கிறார்கள்.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

செல்வம் செழித்தாலும்
சனமே குறைந்தாலும்
வாரிசு வராமல்
வரம்புகள் கட்டுகிறார்கள்.

திருமண உறவோ
பணத்தால் பாலாகிறது.
சிறு சிறு பிளவால்
விவாகரத்து நடக்கிறது.
மறுமணமின்றியே
மற்றக் குடி கெடுகிறது.

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..


பாலுறவைப் பலரோடும் பகிரலாம்..
சிசுவைக் கருவிலே கலையலாம்..
தாய்மையைத் தள்ளிப் போடலாம்..
தாய்ப் பாலைத் தர மறுக்கலாம்..
தனித் தாயாக காலம் கடத்தலாம்..
தந்தையின்றியே பிள்ளை வளர்க்கலாம்..
இரு பெண்களே தம்பதியாய் வாழலாம்..
இவை போல் ஏராலம் காணலாம்..

நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..

தாயே!
உனது காலடியில்
சுவனம் இருக்குது,
நம்புகின்றேன்.

சகோதரியே! உனது உறவில்
உயர்வுகள் உண்டு,
நேசிக்கிறேன்.

மகளே! உன் வளர்ப்பில்
நபியின் நட்பு கிடைக்கிறது
யாசிக்கிறேன்.

மனைவியே!
உன் அரவணைப்பில்
ஆகிரா  தெரிகிறது,
ஆசிக்கின்றேன்.

பெண்களே!
உங்கள் உரிமை காப்பதால்
உயர்த்தப்படுகிறேன்.
உங்களைக் கனிவாய்ப் பார்ப்பதால்
வார்க்கப்படுகிறேன்.
வல்ல அல்லாஹ்வின் அடிமையாய்ப்
பார்க்கப்படுகிறேன்.

பெண்ணே!
இறைவன் தந்த
வளமின்றி
உன்னால் வாழலாமா?

இறைவன் கூறும்
வாழ்வின்றி
உன்னால்
உயரலாமா?



பெண்ணே!
மனம் போன போக்கில்
போகாதே!
மனிதன் போற்றும் உரிமையில்
மாளாதே!
கானல் நீரின் பின்
ஓடாதே!
கடவுள் கீரிய கோட்டைத்
தாண்டாதே!

முற்றும்